tamilnadu

img

கொச்சியில் பிளாஸ்டிக் பாட்டில்களால் உருவாக்கப்பட்ட கோபுரம்!

கேரள மாநிலம் கொச்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கையாக பிளாஸ்டிக் பாட்டில்களால் உருவாக்கப்பட்ட பாட்டில் கோபுரம் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக பல்வேறு வகையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கொச்சியில் உருவாக்கப்பட்டுள்ள பாட்டில் கோபுரத்தில் ஒவ்வொரு பிளாஸ்டிக் பாட்டிலிலும் ஒரு மனிதன் சிக்கித் திணறுவது போன்ற உருவம் இடம் பெற்றுள்ளது. இந்த கோபுரத்துக்குள் சென்று வர கதவும் அமைக்கப்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் இந்த கோபுரத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

;