tamilnadu

img

கேரளத்தில் ஒரே நாளில் குணமடைந்தது 968 பேர் : புதிய கோவிட் நோயாளிகள் 885 பேர்

திருவனந்தபுரம், ஜூலை 25- கேரளத்தில் வெள்ளி யன்று புதிய கோவிட் நோயா ளிகளை விட குணமடைந் தோர் எண்ணிக்கை அதிக ரித்தது. 968 பேர் குணமடை ந்த நிலையில் 885 பேருக்கு வெள்ளியன்று நொய் தொற்று ஏற்பட்டதாக முதல்வர் பினராயி விஜயன் கூறினார். வெள்ளியன்று இது குறித்து செய்தியாளர்களி டம் அவர் மேலும் கூறியதா வது: நோய் தொற்கு கண்டறி யப்பட்ட 885 பேரில் 724 பேருக்கு தொடர்பு மூலம் நோய் தொற்றியுள்ளது. 56 பேருக்கு நோய் தொற்றிடம் தெரியாது. வெளிநாடுகளில் இருந்து வந்த 64 பேருக்கும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 68 பேருக்கும் வெள்ளியன்று நோய் தொற்று கண்டறியப்பட்டது. 24 சுகாதார ஊழியர்களுக்கு நோய் தொற்று ஏற் பட்டுள்ளது. வெள்ளியன்று 4 கோவிட் மரணம் ஏற்பட்டுள்ளது. திரு வனந்தபுரம் சிறையின் கீழ் முருகன் (46), காசர்கோடு ஹயருன்னிசா (48), மாதவன் (68), ஆலப்புழா மரியம்மா (85) ஆகியோர் உயிரிழந்த னர். வெள்ளியன்று காலை வரை 24 மணி நேரத்தில் 25,160 மாதிரிகள் ஆய்வு செய் யப்பட்டன. கண்காணிப்பில் 156747 பேர் உள்ளனர். இதில் 9297 பேர் மருத்துவமனை களில் உள்ளனர். வெள்ளி யன்று 1346 பேர் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப் பட்டனர். தற்போது சிகிச்சை யில் உள்ளது 9371 பேர்.  இதுவரை மொத்தம் 338038 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. இதில் 9185 முடிவுகள் நிலுவையில் உள்ளன. இதில்லாமல் முன்னுரிமை பிரிவினரில் 109635 மாதிரிகள் சேகரிக் கப்பட்டதில் 105433 மாதிரிக ளில் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் தற்போது 453 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.