tamilnadu

img

கேரளத்தில் புதிதாக 79 கோவிட் நோயாளிகள்...

திருவனந்தபுரம்:
கேரளத்தில் சனியன்று புதிதாக 79 பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதில் 47பேர் வெளிநாடுகளில் இருந்தும் 26 பேர் இதர  மாநிலங்களில்  இருந்தும்கேரளத்துக்கு வந்தவர்கள். தொடர்புகள் மூலம் 5 பேருக்கு நோய் தொற்றுஏற்பட்டுள்ளது.நோய் தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 60 பேர் திங்களன்று குணமடைந்தனர். இதுவரை 1234 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1366 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 1,22,143 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 1,20,157 பேர் வீடுகள்-நிறுவனகண்காணிப்பிலும் 1986 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர். செவ்வாயன்று 210  பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

செவ்வாயன்று காலை வரை 24 மணி நேரத்தில் 4003 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுவரை 1,18,893 நபர்களின் மாதிரிகள் ஆய்வுக்கு (தனியார் ஆய்வகங்கள் உட்பட) அனுப்பி வைக்கப்பட்டன. அதில் 4081 மாதிரிகளின் முடிவுகள் வரவேண்டும்.  மேலும், சமூக தொடர்பு அதிகம்உள்ள சுகாதார ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள், சமூக தொடர்பு அதிகம் உள்ள நபர்கள் போன்ற முன்னுரிமை பிரிவினரின் 32,534 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட் டன. அதில் 31,093 மாதிரிகள் நோய் தொற்றுஇல்லை என உறுதியாகின. மறுமுறை ஆய்வுஉட்பட மொத்தம் 1,57,117 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.செவ்வாயன்று மேலும் ஒரு தீவிர நோய்பரவல் பகுதி (ஹாட் ஸ்பாட்) அறிவிக்கப் பட்டது. அது திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை பஞ்சாயத்தில் 16, 17, 18, 19, 20, 21 ஆகிய வார்டுகளை உள்ளடக்கிய பகுதியாகும்.  16 பகுதிகள் தீவிர நோய் பரவல் பட்டியலில் இருந்து விலக்கப்பட்டன. தற்போது கேரளம் முழுவதுமாக 110 ஹாட் ஸ்பாட்டுகள்உள்ளன.கேரளத்துக்கு கோவிட் காலத்தில் விமானம் மூலம் 75,656 பேரும் கப்பல் மூலம் 1621 பேரும், சாலை வழியாக  1,42,388 பேரும்ரயில் மூலம் 27,976 பேர் உட்பட கேரளத்துக்கு மொத்தம் 2,47,641 பேர் வந்துள்ளனர். 14 நாட்கள் கண்காணிப்பில்  (தனிமை) இருந்து 1,29,971 பேர் விடுவிக்கப்பட்டனர்.

;