அமெரிக்காவைச் சேர்ந்த கென்யான் இன்டர்நேஷனல் உதவியுடன் கோழிக்கோடு விமான நிலையத்தில் விமான விபத்துக்குள்ளான இடத்திலிருந்து இதுவரை 298 சிதறிய பொருள்கள் மீட்டுள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
கோழிக்கோட்டில் விமான விபத்தில் காயமடைந்த 92 பயணிகள் முழுமையான குணமடைந்த பின்னர் மருத்துவமனைகளில் இருந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். புதன்கிழமை காலை முதல் வியாழக்கிழமை காலை வரை கோழிக்கோட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து 85 பயணிகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
ஆகஸ்ட் 7 ஆம் தேதி இரவு பலத்த மழையில் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது 190 பேருடன் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் டேபிள் டாப் ஓடுபாதையில் விபத்துக்குள்ளானது. பி737 விமானமானது, 35 அடி கீழே ஒரு பள்ளத்தாக்கில் விழுந்து இரு துண்டுகளாக உடைந்து, இரு விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.
கென்யன் இன்டர்நேஷனல் உதவியுடன் 298 விமானத்தின் சிதறிய பாகங்கள் இதுவரை விபத்து நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது. அவற்றை சரியான அடையாளம் கண்டறிந்ததற்கு பிறகு சரிபார்க்கப்பட்டு பொருள்கள் உரிய பயணிகளிடம் ஒப்படைக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை காலை, காயமடைந்த 92 பயணிகள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். விமான விபத்தில் உயிரிழந்த 16 பயணிகளின் சடலங்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.