tamilnadu

கேரளத்தில் சமூக பரவலை தடுக்க 174 கிளஸ்டர் கேர்: முதல்வர்

திருவனந்தபுரம்,ஆக.4- கேரளத்தில் நோயாளி களின் எண்ணிக்கை அதி கரித்து வரும் நிலையில் கிளஸ்டர் கேர் அமைக்கப்பட் டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.   இதுகுறித்து செய்தியா ளர்களிடம் மேலும் முதல்வர் கூறியதாவது: கேரளத்தில் இதுவரை 174 கிளஸ்டர்கள் கண்டறியப்பட்டு கட்டுப்பா டுகள் தொடங்கப்பட்டன. 32 கிளஸ்டர்கள் நோய் பரவல் தடுக்கப்பட்டு முழுமையாக கட்டுப்பாடுகள் விலக்கப் பட்டன. 34 இடங்களில் நோய் பரவல் அதிகரித்துள்ளது. 51 இடங்களில் அதே நிலை தொடர்கிறது. 57 இடங்களில் நோய் பரவல் குறைகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியை மையப்படுத்தி எதிர்பாராத வகையில் கோவிட் அதிக ரிப்பது தெரியவரும்போது அப்பகுதி கிளஸ்ட்டராகிறது.  கோவிட் பாதிப்புக்கு உள்ளாவோரை உடனடியாக கண்டறிந்து கிளஸ்டராக பிரித்து நடவடிக்கைகளை வலுப்படுத்தவில்லை என்றால் சமூக பரவல் அதிக ரிக்கும். ஒரு பகுதியை கிளஸ்டராக்கினால் விரைவு நடவடிக்கை குழு அமைக்கப் பட வேண்டும்.  கட்டுப்பாட்டு அறையின் பொறுப்பில் செயல்படும் பகுதியில் நோய் பரவலைத் தடுக்க அப்பகுதி கட்டுப் பாட்டு மண்டலமாக்கப்படும்.

ஊரடங்கு அறிவித்து அப் பகுதி மக்கள் தனிமை படுத்தப்படுவர். கிளஸ்டரில் மிகவும் முக்கியமானது தொடர்புகளை கண்டறிவ தாகும். சோதனை, தனிமைப் படுத்தல் உள்ளடங்கிய குறிப்புகள் அடிப்படையில் முதல்நிலை, இரண்டாம் நிலை தொடர்பில் உள்ளவர் கள் பரிசோதனைக்கு உட் படுத்தப்படுவர்.  கடற்கரை பகுதிகளில் அதிக கிளஸ்டர்கள் உருவாகி வருகின்றன. இந்த பகுதிகளில் கிளஸ்டர் பராமரிப்புக்கு தனி வரைபடம்தயார் செய்யப் பட்டுள்ளது. மலைப்பகுதியில் பழங்குடி சமூகத்தினரி டேயே கோவிட் சென்றடை யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பழங்குடி பகுதி களுக்கு என தனி வரைபடம் தயார் செய்யப்பட்டுள்ளது. கோவிட் பரவுவதைத் தடுக்க வெளியாட்கள் அடர்த்தி யான காலனிகள் மற்றும் குடி யிருப்புகளுக்கு செல்லக் கூடாது.  கிளஸ்டர்களில் எப் போதும் முக கவசம் அணிய வேண்டும். தனிமனித இடை வெளி பின்பற்ற வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என முதல்வர் கூறினார்.