திருவனந்தபுரம், ஆக.1- கேரளத்தில் வியாழன் மதியத்துக்கு பிறகும் வெள்ளியன்றுமாக 1310 புதிய கோவிட் நோயாளிகள் கண்டறியப்பட்ட னர். இதில் 1162 பேருக்கு தொடர்பு மூலம் நோய் தொற்று ஏற்பட்டது. 36 பேருக்கு நோய் தொற்றிடம் தெரியாது. 864 பேர் குணமடைந்தனர். வெள்ளியன்று கேரள சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: வெள்ளி யன்று கோவிட் உறுதி செய்யப்பட்டதில் 48 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 54 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். 20 சுகாதாரத்துறை ஊழி யர்களுக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. வெள்ளியன்று உயிரி ழந்த 3 பேர் உட்பட இதுவரை மாநிலம் முழு வதும் 73 பேர் கோவிட்டுக்கு உயிரிழந்த னர். இதுவரை 13,027 பேர் குணம டைந்துள்ளனர். தற்போது 10,495 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் 1,43,323 பேர் இப்போது கண்காணிப்பில் உள்ள னர். இதில் 1,33,151 பேர் வீடுகள்/ நிறு வனங்களிலும் 10,172 பேர் மருத்துவ மனை கண்காணிப்பில் உள்ளனர்.
வெள்ளியன்று 1292 பேர் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டனர். வெள்ளியன்று காலை வரை 24 மணி நேரத்தில் 22,279 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. முன்னுரிமை பிரிவினர் உட்பட இதுவரை மொத்தம் 7,76,268 மாதரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. அதில் 6445 மாதிரிகளின் முடிவு கள் நிலுவையில் உள்ளன. சுகாதா ரத்துறையினர், பொதுநல ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட முன்னுரிமை பிரிவினரின் 1,23,227 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில் 2645 முடிவுகள் நிலுவையில் உள்ளன. வெள்ளியன்று 14 கட்டுப்பாட்டு பகுதிகள் புதியதாக உருவாகின. 11 பகுதிகளில் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டன. மொத்தம் 498 பகுதிகளில் கட்டுப்பாடுகள் உள்ளன.