கும்பகோணம், மே 19- கொரோனா தொற்று பகுதிகளில் மதுக் கடை திறப்பதற்கு அனுமதி மறுக் கப்பட்டுள்ள நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் டாக்டர் பெசன்ட் ரோடு அருகே கோதண்ட பாணி தெருவில் அரசு மதுக் கடை உள்ளது. இதை திறப் பதற்காக முன்னேற்பாடுகள் செய்த போது தகவலறிந்த அந்தப் பகுதி மக்கள் அரசு மதுபான கடைக்கு முன்பாக கூடி கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்து வந்த கிழக்கு காவல்துறையி னர், மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பொதுமக்கள் இங்கு கடை திறக்கக் கூடாது. ஏற்கனவே இந்த பகுதியில் இரண்டு கொலைகள் நடை பெற்று உள்ளது மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க வேண்டு மானால் இந்த பகுதி கடையை திறக்க கூடாது. மக்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கடையை திறப்ப தற்கு அனுமதிக்க மாட்டோம். மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளோம் என்று மக்கள் கூறினார்கள். இதைதொடர்ந்து காவல் துறையினர், இந்த கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளிட் தெரிவிக்கப்படும் என கூறினர்.