tamilnadu

img

மதுக்கடை திறக்க எதிர்ப்பு - பெண்கள் போராட்டம்

கோபி, ஜூலை 25 - ஈரோடு மற்றும் சேலம் மாவட் டத்தில் அரசு மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட் டிபாளையம் அருகே உள்ள சிங்கி ரிபாளையத்தில் நூற்றுக்கும் மேற் பட்ட வீடுகளில் 500-க்கும் மேற் பட்ட மக்கள் வசித்து வருகின் றனர்.

இந்நிலையில், ஊருக்குள் செல்லும் முக்கிய சாலையின் வழியே அரசு மதுபானக்கடை வெள்ளியன்று திறக்கப்பட்டுள் ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த ஐம்பதுக் கும் மேற்பட்ட பெண்கள் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டு மென மதுக்கடைக்குச் செல்லும் வழியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த கடத்தூர் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்க ளிடம் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர்.  அப்போது பதிலளித்த பெண் கள், பிரதான சாலையிலிருந்து எங்கள் கிராமத்திற்குள் வருவதற்கு இது தான் முக்கிய சாலையாக உள்ளது.

தற்போது கொரோனா தொற்றால் பேருந்துகள் இல்லாத நிலையில் பெண்கள் வேலைக்குச் சென்று இருசக்கர வாகனத்தில் வீடு திரும்ப இரவு ஆகிறது. அவ்வாறு திரும்பும் வழியில் குடிமகன்கள் சாலையிலேயே அமர்ந்து மது அருந்தி ரகளையில் ஈடுபடுவ தால் இரவில் வீடு திரும்பும் பெண்க ளுக்கு உரிய பாதுகாப்பு இல்லையென குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து கடத்தூர் காவல் துறையினர் மாவட்ட நிர்வாகத் திற்கு புகார் தெரிவிக்குமாறு அறிவுத்தியதன் அடிப்படையில் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

இதேபோல், சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம், அரசிராமணி, மூலப்பாளையம் பகுதியில் டாஸ் மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது

. குடிநீர் பிடிக்கும் தொட் டிக்கு அருகில் இந்த கடை செயல் படுவதால் பொதுமக்கள் பெரும் இடையூறுக்குள்ளாகி வருகின்ற னர். ஆகவே, இந்த கடையை அகற் றக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊர்பொதுமக்கள் மனு அளித்தனர்.