குஜராத்தில் SFI யின் வீராவேசம் மிகுந்த போராட்டங்கள்....குஜராத்தைப் பற்றிய கற்பனைகள் பலவற்றையும் உடைத்து சுக்கு நூறாக்குகின்றன...
நாட்டில் பல இடங்களில் நடப்பது போலவே குஜராத்திலும் நடந்து வரும் பாலியல் பலாத்காரங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி செப்டம்பர் 30 அன்று ஆயிரக் கணக்கான மாணவர்களை அணிதிரட்டி SFI நடத்திய போராட்டம், குஜராத்தை ஆளும் பாஜக மற்றும் சங் பரிவார் கும்பலுக்கு நடுக்கத்தை உருவாக்கியுள்ளது...
மாநில அரசு, காவல்துறையை பயன்படுத்தி போராடும் மாணவர்கள் மீது கடும் தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டு போராட்டங்களை ஒடுக்க முயன்று வருகிறது...
செப்டம்பர் 30 அன்று அகமதாபாத்தில் நடந்த போராட்டத்திற்குப் பிறகு SFI யின் தலைமையில் நடக்கும் போராட்டங்கள் மாநிலத்தின் பல பகுதிக்கும் பரவியுள்ளது...
சாபர்கட்டா மாவட்டத்தில் உள்ள ஹிம்மத் நகரில் நடந்த போராட்டத்தில் மாநிலத் தலைவர்கள் உட்பட ஏராளமான தோழர்கள் காவல்துறையால் கடுமையாக தாக்கி கைது செய்யப்பட்டார்கள்...
கைது செய்யப்பட்ட தோழர்கள் காவல் நிலையத்திலும் போராட்டத்தை தொடர்ந்தனர்... தங்களை மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்...
வேறு வழியின்றி காவல்துறை மாணவர் சங்கத் தோழர்களை மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு கொடுக்க அனுமதித்தது...
கடந்த சில காலமாக SFI க்கு குஜராத் மாநிலத்தில் மாணவர்களிடையே செல்வாக்கு அதிகரித்து வருகிறது என்பது சங்க பரிவார் முகாமில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது...
கடந்த காலங்களில் மாநிலத்தில் இந்திய மாணவர் சங்கம் வலுவாக இல்லாத நிலையில்...தற்போது மாநில ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது... கடந்த ஆண்டு மாணவர் பேரவைத் தேர்தல்களில் போட்டியிடும் அளவுக்கு SFI தனது செல்வாக்கு தளத்தை குஜராத் மாணவர்களிடையே வலுவாக்கியது...
மாநிலத்தை ஆளும் பாஜக மற்றும் அதன் மாணவர் அமைப்பான ABVP ஆகியவை கொடுக்கும் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் SFI தனது செயல்பாடுகள் மூலம் முன்னேறி வருகிறது...
-Sadan Thuckalai