tamilnadu

img

சாதிக்கட்டுப்பாடு என்ற பெயரில் பெண்கள் மீது அடக்குமுறை

அகமதாபாத்:
குஜராத் மாநில பனாஸ்கந்தா மாவட் டத்திலுள்ள தக்கோர் சமூகத்தைச் சேர்ந்தபிரமுகர்கள், தங்கள் சமூகப் பெண்களுக்கு கட்டுப்பாடுகள் என்ற பெயரில், அடக்குமுறை உத்தரவுகளைப் பிறப்பித் துள்ளனர்.திருமணம் ஆகாத இளம்பெண்கள் செல்போன் வைத்துக் கொள்ளக் கூடாது;சாதி மறுப்பு திருமணம் செய்யக் கூடாதுஎன்று மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று அச்சுறுத்தல் செய்துள்ளனர்.பனாஸ்கந்தா மாவட்டம், தண்டிவாடா தாலுகாவுக்கு உட்பட்ட 12 கிராமங்களைச் சேர்ந்த தாக்கோர் சமூகத்தினர், கடந்த ஜூலை 14-ம் தேதி ஊர்க்கூட்டம் ஒன்றைநடத்தியுள்ளனர். அதில்தான், “திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது. ஒருவேளை அவர்களிடம் செல்போன் இருப்பது கண்டறியப்பட்டால் பெற்றோர்களே அதற்கு பொறுப்பாக்கப் படுவார்கள்; தாக்கோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சாதி மறுப்புத் திருமணம் செய்துவைத்தால் அவர்களுக்கு ரூ.1.5 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்” என்று கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பாஜக ஆளும் குஜராத்தில், சாதியவாதிகள் எந்தளவிற்கு கொட்டமடிக்கிறார்கள் என்பதற்கு, தண்டிவாடா ஊர்க் கூட்டமும் ஒரு சாட்சியாகி இருக்கிறது.