குஜராத் மாநிலத்தில் 81 ஆண்டு காலம் செயல்பட்டு வந்த தமிழ் பள்ளியை அம்மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு மூடுவதாக அறிவித்துள்ளது. இதனை எதிர்த்து அம்மாநிலத்தில் உள்ள தமிழர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
குஜராத் மாநிலம் அகமதாபாத், மணிநகர் போன்ற பகுதிகளில் அதிக அளவில் தமிழர்கள் வசித்து வருகிறார்கள்.அங்கு தமிழுக்காக தமிழ் சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அகமதாபாத் பகுதியில் ஒரு தமிழ் பள்ளி செயல்பட்டு வருகிறது. இது 81 ஆண்டுகளாக குஜராத் பகுதியில் உள்ள தமிழர்களுக்கு தமிழ் கற்றுக்கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு, பள்ளியில் போதுமான மாணவர்கள் இல்லை என கூறி பள்ளியை மூடுவதாக அறிவித்தது. இதனை கண்டித்து அங்குள்ள தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.