tamilnadu

img

கோட்சேவின் பிறந்தநாளை கொண்டாடிய ஹிந்து மஹாசபா உறுப்பினர்கள் 6 பேர் கைது

குஜராத் மாநிலத்தில் கோட்சேவின் பிறந்த நாளை கொண்டாடிய ஹிந்து மஹாசபா உறுப்பினர்கள் 6 பேரை காவல்துறை கைது செய்தது.


இந்திய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் சில இந்துமத தீவிரவாத அமைப்புகள் கோட்சே போன்ற தேசத்துரோகிகளை கண்ணியம்மிக்கவர்களாக மாற்ற முயன்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவின் பிறந்த நாளை கொண்டாட இந்து மத தீவிரவாத அமைப்பான ஹிந்து மஹாசபாவைச் சேர்ந்த சிலர் குஜராத் மாநிலம் சூரத் நகரின் லிம்பையாயத் பகுதியில் உள்ள சூர்யமுகி அனுமன் கோவிலில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.


இதைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஹிரென் மசுரூ, வல பார்வாத் உள்ளிட்ட ஹிந்து மஹாசபா உறுப்பினர்கள் 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களின் செயல் பொதுமக்களிடையே கிளர்ச்சி ஏற்படுத்தும் வகையிலும், அமைதியை குலைக்கும் வகையிலும் அமைந்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சூரத் காவல்துறை ஆணையர் சதீஷ் சர்மா தெரிவித்துள்ளார்.