கிருஷ்ணகிரி, ஆக.13- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 3வது மாநில மாநாடு தஞ்சையில் 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வட்டம், சூடு கொண்ட பள்ளியில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட நந்தீஸ்-சுவாதி நினைவு சாதி ஆணவப் படுகொலை ஒழிப்புச் சுடர் செவ்வாயன்று புறப்பட்டது. இதன் துவக்க நிகழ்வுக்கு மாவட்டத் தலைவர் ஆனந்த குமார் தலைமை தாங்கினார். செயலாளர் நாகேஷ்பாபு முன்னிலை வகித்தார். பயணக் குழுத் தலைவர் மாநிலச் செயலாளர் மு.கந்தசாமி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து மாநில துணைத் தலைவர் பி. டில்லி பாபு சுடரை எடுத்துக் கொடுக்க சுடர் பயணக் குழு தோழர்கள் நாராயணமூர்த்தி, நந்திஸின் தம்பி சங்கர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். துணைச் செயலாளர் இருதயராஜ், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ஜெயராமன், மாவட்டக் குழு உறுப்பினர் சேதுமாதவன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், மாதர் சங்க மாவட்டச் செயலாள் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கோதண்டராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி ராமச்சந்தின், திராவிடர் கழகச் செயலாளர் வனவேந்தன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ், மாவட்ட துணைச் செயலாளர் முனிராஜ், ஓசூர் நகர் மன்ற முன்னாள் திமுக உறுப்பினர் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலரும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
நந்தீஸ் பெற்றோர் கவுரவிப்பு
ஆணவப் படுகொலை செய்யப்பட்ட நந்தீஸின் பெற்றோர் நாராயணப்பா-திம்மக்கா இந்த மேடையில் கவுரவிக்கப் பட்டனர். முன்னதாக, சேலம் மாங்குயில் கலைக்குழு மேட்டூர் வசந்தி, பாலாஜி கலைக் குழுவினரின் புரட்சிகர இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சுடர் பயணக்குழுவிற்கு கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தோழர் அசோக் நினைவு சமூக நீதி சுடர்
மக்கள் போராளி தோழர் அசோக் நினைவு சமூக நீதி சுடர் பயணம் செவ்வாயன்று நெல்லையில் இருந்து துவங்கியது தோழர் அசோக்கின் நினைவு சமூக நீதி சுடர் நெல்லையில் இருந்து புறப்பட்டது.இதற்கான நிகழ்ச்சி பாளை ரெட்டியார்பட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு அலுவலகத்தில் உள்ள லெனின் சிலை அருகில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில குழு உறுப்பினர் பூ.கோபாலன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செய லாளர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீ.பழனி, காப்பீட்டு கழக ஊழியர் சங்க கோட்ட பொது செயலாளர் செ.முத்துகுமாரசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான ஆர்.கிருஷ்ணன் தோழர் அசோக்கின் நினைவு ஜோதியை எடுத்து தர தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொது செயலாளர் செல்லக்கண்ணு பெற்று கொண்டார். நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பொ.ஜெயராஜ், ஸ்ரீராம், எம்.சுடலைராஜ், ராஜகுரு, துரை, மாவட்ட குழு உறுப்பினர் பா.வரகுணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஆர்.மதுபால், மாவட்ட பொருளாளர் ஆலங்குளம் பாலு, மாதர் சங்க மாவட்ட தலைவர் கு.பழனி, சங்க பாளை தலைவர் மரகதம் மற்றும் தோழர் அசோக்கின் பெற்றோர், அவரது சகோதரர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கான பயணக்குழுவில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், சுடலைராஜ், வி.ச மாவட்ட தலைவர் ராஜகுரு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட பொருளாளர் பாலு, வாலிபர் சங்க கவுதம், அசோக் சகோதரர் சதீஸ், எஸ்.எப்.ஐ மாவட்ட தலைவர் வெற்றி ஆகியோர் வேனில் புறப்பட்டு சென்றனர்.