கிருஷ்ணகிரி, ஜூன் 7- கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் சுமார் 40 தட்டெழுத்து பயிலகங்கள் உள்ளன. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தட்டெழுத்து பயின்றும் வருகின்றனர். கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், இதன் உரிமையாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து, பயிலகங்களுக்கான வாடகை, மின் கட்டணம் செலுத்த முடியாமல் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் பெரும்பாலான தொழில்களுக்கு மாவட்டத்தில் திறக்க அனுமதி அளித்துள்ள நிலையில் தட்டெழுத்து பயிலகங்களுக்கு மட்டும் இன்னும் அனுமதி அளிக்கவில்லை. எனவே பயிலகங்களை திறக்க அனுமதி அளிக்கக் கோரி, தட்டெழுத்து பயிலக உரிமையாளர்கள், மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.