tamilnadu

img

காவலன் செயலி விழிப்புணர்வு பேரணி

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ரோட்டரி சங்கம், காவல்துறை இணைந்து காவலன் செயலி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு ரோட்டரி சங்க தலைவர் ஆர்.தங்கதுரை தலைமை வகித்தார். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை காவல் துணை கண்காணிப்பாளர் பி.பாலமுருகன் துவக்கி வைத்தார். பேரணியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் பழனி துரை, மனோகரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள், கார்னிவல் தொழில் பயிற்சி கல்லூரி மாணவிகள் என 450 பேரும், ரோட்டரி துணை ஆளுநர் கராத்தே கன்னையன், செல்போன் விற்பனையாளர்கள் மற்றும் காவல்துறையினர், ரோட்டரி சங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட பேரணி பெரியகடை வீதி, கட்டுமாவடி முக்கம் சாலை, தாலுகா அலுவலக சாலை, சந்தைப்பேட்டை சாலைவழியாக காவல் நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு காவலன் செயலி சம்பந்தமாக எடுத்துரைத்து அவர்களுடைய செல்போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டது. நிறைவாக காவல் ஆய்வாளர் ரவீந்திரன் நன்றி கூறினார்.

;