tamilnadu

img

மக்கள் மொழியில் படைப்புகளைத் தர நிறைய வாசிக்க வேண்டும் : கவிஞர் யுகபாரதி

புதுக்கோட்டை, பிப்.21- மக்கள் மொழியில் எளிய படைப்புகளைத் தருவதற்கு ஏராள மான புத்தகங்களை வாசிக்க  வேண்டும் என்றார் திரைப்படப்பாட லாசிரியர் கவிஞர் யுகபாரதி. புதுக் கோட்டை புத்தகத் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை அவர் ஆற்றிய உரை: திரைப்படங்களுக்கு பாட்டு எழுதுவது கடினமானதல்ல. தமிழர்க ளாகப் பிறந்த எல்லோரும் பாடல் எழுதுவது இயற்கையானது. சில இயக்குனர்கள் விலக்கி வைத்த எனது பாடல்களை, வேறு படங்களுக்குப் பயன்படுத்தும் போது மக்கள் கொண்டாடித் தீhத்தீர்த்துள்ளனர். பொழுதுபோக்கு பாடல்களை எழுதிவரும்  அதேவேளையில் மிகவும் கவனத்தோடு தவறான பொருளில்லாமல் பாடல்களை எழுதவும் தொடர்ந்து முயற்சித்து வரு கிறேன். அப்படி எனக்கு  ஆத்மார்த்த மாக நான் எழுதிய பாடல், ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற ஜோக்கர் படப் பாடல். 

மக்கள் ரசிக்கும்படியான, அவர்கள் புழங்கும் மொழியிலேயே எளிய வார்த்தைகளால் எழுதப் படும் பாடல்; பார்ப்பதற்கு சுலபமாக இருக்கும். ஆனால், அந்த எளிய சொற்களை இயல்பாகக் கொண்டு வருவதற்கு ஏராளமான புத்தகங்க ளை வாசிக்க வேண்டும். தான் புழங்கும் துறைக்கான புத்தகங்களை மட்டுமே படைப்பாளிகள் வாசிக்கக் கூடாது. அனைத்து வகையான புத்த கங்களையும் வாசிக்கும்போதுதான் தெளிவுபிறக்கும். கவிஞர்கள், பாடலாசிரியர்கள் உரைநடையை யும் எழுதிப் பழக வேண்டும். அப்போதுதான், ஜனரஞ்சமாக பாடல்களை எழுத முடியும். கொஞ்சம் பயிற்சியும் முயற்சியும், கூடவே நல்ல வாசிப்பு இருந்தால் திரைப்படப் பாடல்களைத் தாராள மாக எழுத முடியும் என்றார். 

முன்னாள் சட்டப்பேரவை உறுப் பினர் கவிதைப்பித்தன் பேசும்போது, அடித்தட்டு மக்களிடம் இருந்து வரும் படைப்பாளிகளின் வளர்ச்சிக்கு பல முட்டுக்கட்டைகள், தடைகள் வரலாம். அதற்கு என் அனுபவத்திலி ருந்தே ஏராளமான உதாரணங்களை சொல்ல முடியும். அவற்றை எதிர் கொள்ள வேறு எந்த ஆயுதமும் நமக்கு கைகொடுக்காது. நமக்குத் துணையாக இருப்பவை புத்த கங்கள் மட்டுமே. வாசிப்பதுதான் நம்மை எதிர்நோக்கி வரும் இடர்பாடு களைத் தகர்க்கும் என்றார். தொல்லியல் கழகத்தின் மாநி லப் பொதுச் செயலர் பேராசிரியர் சு.ராஜவேலு பேசும்போது, அதிக தொல்லியல் எச்சங்களைக் கொண் டது புதுக்கோட்டை மாவட்டம். கீழடிக்கு நிகராக தொல்லியல் தடயங்கள் இங்கு நிறைய உள்ளன. புதுக்கோட்டையை மையப்படுத்தி யே மாநிலத்தின் தெற்குப் பகுதியை எல்லையாகக் கொண்ட தனித் தொல்லியல் வட்டம் மத்திய தொல்லி யல் துறையால் விரைவில் அறி விக்கப்பட உள்ளது. சங்க காலக் கோ ட்டையான பொற்பனைக்கோட்டை யை அழகப்பா பல்கலைக்கழகத்தின் மூலமாக ஆய்வு செய்ய இருக்கி றோம்.  நாடு முழுவதும் 600, 700 இடங்க ளில் ஆய்வுகள் நடந்துள்ளது. ஆனால் எளிய மக்கள் பானை ஓடுகளில் எழுதி வைத்த சின் னங்கள் தமிழ்நாட்டுப் பகுதியில் தான் கிடைத்துள்ளன. அந்தளவு க்கு சாதரண பாமர மக்களும், பெண்களும் எழுத்தறிவு மிக்கவர்க ளாக தமிழர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை இதுவே சான்றாக உள்ளது என்றார்.