tamilnadu

img

தேன்கனிக்கோட்டையில் நிலம் கொடுத்தும் பட்டா வழங்காத அதிகாரிகள்

கிருஷ்ணகிரி, நவ.7- கிருஷ்ணகிரி மாவட்டம் பேளா ளம், அந்தேவனப் பள்ளி, மணி யம்பாடி, மரகட்டா, சாப்ராணப் பள்ளி கிராமங்களில் 20 ஆண்டு களுக்கு முன்பு அரசு கட்டிக்கொடுத்த  தொகுப்பு வீடுகளுக்கும், இருதுக் கோட்டை, பேளாளத்தில் 1997-ல் அரசு  கொடுத்த குடியிருப்பு நிலம் 250 ஏக்க ருக்கும், குந்துக் கோட்டை நீண்ட கால விவசாய சாகுபடியில் உள்ள 3500 ஏக்கருக்கும், குடியிருப்பு நிலங்க ளுக்கும், அன்னியாளம், சொப்புக்  குட்டை சாலிவாரம், தனபால் கொட்டாய் உள்ளிட்ட வனப்பகுதிக்கு  அருகில் உள்ள 67 ஊராட்சி குடி யிருப்புகள், சாகுபடி நிலங்களுக்கும் 2009 ல் சட்டத்தில் விதிவிலக்கு கொடுத்தும் இதுவரை மூன்று தலை  முறைகளாக வாழ்ந்து வரும் மக்க ளுக்கு வழங்கப்படவில்லை. மேலும் பேளாளம், சக்கிலிபளே யம், மருதனப்பள்ளி, சமந்தக் கோட்டை, குருபட்டி, தோட்டிக்குப் பம், சின்னாந்தொட்டி, காளியப்பன் கொட்டாய், பெட்ட முகிலாளம், அய்யூர் உள்ளிட்ட பல கிராமங்க ளுக்கு சாலை, பேருந்து வசதி கிடை யாது. நியாய விலைக் கடைக்கு செல்ல வேண்டும் என்றாலும் அவசர மருத்து வத்திற்கும் 7 கிலோ மீட்டர் நடந்தே செல்ல வேண்டியிருக்கிறது. இல்லை என்பது மட்டுமே  நிறைந்து இருக்கும் தேன்கனிக் கோட்டை வட்டத்தில் உள்ள இருதுக்கோட்டையில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரைக்கும் உள்ள அரசுப் பள்ளி அருகில் சாலையை ஒட்டியே டாஸ்மாக் கடை திறக்கப் பட்டுள்ளதால் மாணவிகள் ஆசிரி யைகள், அப்பகுதி வழியே நடமாட முடியவில்லை. சில நேரங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளா கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன் கனிக்கோட்டை வட்டத்தில் ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை, குடி யிருப்புகளுக்கு பட்டா, இடிந்த தொகுப்பு வீடுகளுக்கு மாற்று வீடு கள், அரசு கொடுத்த தொகுப்பு வீடு களுக்கு பட்டா, கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் கேட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டத் தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார் மாவட்டச் செய லாளர் பிரகாஷ், வட்டச் செயலாளர்  அனுமப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரும்பு விவசாயிகள் சங்க  மாநில பொதுச் செயலாளரும், தமிழ்நாடு விசாயிகள் சங்க மாநில  துணைத் தலைவருமான டி.ரவீந்தி ரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் சேகர், இருதயராஜ் சாம்ராஜ், சுரேஷ், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, வட்டச் செய லாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர்  உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வட்டாட்சியருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. டாஸ்மாக் கடையை பள்ளி அருகிலிருந்து அகற்றவும், பள்ளி மாணவிகளுக்கு நகர பேருந்து  இயக்கவும் உடனடியாக நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும் பட்டா குறித்து மேல் நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்வதாகவும் வட்டாட்சியர் உறுதி யளித்தார்.