tamilnadu

img

200 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் மலை மக்களுக்கு பட்டா வழங்காத அதிகாரிகள்

வேலூர், ஆக.22- வேலூர் மாவட்டம் திருப்பத் தூரை அடுத்த ஜவ்வாது மலையில் புங்கம்பட்டு நாடு, புதூர்நாடு, நெல்லிவாசல் நாடு 3 ஊராட்சிகளில் 34 கிராமங்களைச் சார்ந்த 2000-க்கும்  மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இதில்  புங்கம்பட்டு நாடு  ஊராட்சியில் 14 கிராமங்களில் ஒன்  றான கீழானூர் கிராமத்தில் வசிக்கும்  120 குடும்பங்களில் 70 குடும்பங்க ளுக்கு பட்டா வழங்கப்படவில்லை. இவர்கள் கடந்த 200ஆண்டு களுக்கும் மேலாக தலைமுறை தலை முறையாக இந்த இடத்திலேயே வசித்து வருகின்றனர். அந்த இடங்க ளுக்கு 2006 வன உரிமைச் சட்டத் தின்படி வீட்டுமனை, நிலப்பட்டா கேட்டு  2015 ஆம் ஆண்டு 797 மனுக்க ளும், 2016 ஆம் ஆண்டு 1,354 மனுக்க ளும் கொடுத்தனர். இதில் 90 பேருக்கு மட்டுமே பட்டா ஒதுக்கீடு செய்து மாவட்ட ஆட்சியர், சாராட்சி யர், பழங்குடி திட்ட அலுவலர், வனத்துறையினர்  கையொப்பமிட்டு 12 மாதமாகியும் பயனானிகளின் கைளுக்கு பட்டா கிடைக்கவில்லை. இதற்கிடையே, தன்னுடைய நிலத்தில் விவசாயம் செய்து வந்த  லோகநாதன், சாந்த மூர்த்தி ஆகி யோர் மரத்தை வெட்டினர், காட்டை எரித்தனர் என்று வனத்துறையினர் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது நீதிமன்ற பிணையில் வெளி வந்துள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு  அண்ணாமலை என்பவரை கைது செய்த வனக் காவலர் வெங்கடேசன், வனத்துறை அலுவலகத்தில் அடைத்து வைத்துள்ளார். கைது செய்யப்பட்ட அண்ணாமலையை விடுவிக்கக் கோரியும், மலை கிரா மங்களில் வசிக்கும் மக்களை அங்கி ருந்து வெளியேற்ற அவர்கள் மீது  தொடர்ந்து பொய் வழக்குப் போட்டு  கைது செய்வதை நிறுத்த வேண்டி யும், வீடு மற்றும் நிலப் பட்டா கோரி  விண்ணப்பித்துள்ள அனைவருக்கும்  பட்டா வழங்க வலியுறுத்தியும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. வேலூர் வருவாய் கோட்டம்  கணியம்பாடி, புதூர், ராணிப்பேட்டை  வருவாய் கோட்டம் மேல் புலம், முக மது பேட்டை, மேல் நத்தம் பாக்கம், கீழ்குப்பம், நம்பித்தாங்கள், வரத ராஜபுரம், திமிரி, கணியம்பாடி, மேல பழந்தை, சக்கரமல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் வசித்து வரும் வேட்  டைக்காரன் பழங்குடியின மக்க ளுக்கு வீடு, வீட்டுமனை பட்டா, வீடில்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா,தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டி ஏற்கனவே அளித் துள்ள மனுக்களின் மீது உரிய நட வடிக்கை எடுக்கக் கோரியும் மனு வழங்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ப.தாட்சாயிணி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் க.வேணு சேகரன் ஆகியோர் உரிய நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித் துள்ளனர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள்  சங்க மாநிலத் தலைவர் பி.டில்லி பாபு, ஆதிவாசி மக்கள் உரிமை களுக்கான மேடை அமைப்பின் மத்தி யக்குழு உறுப்பினர் ஏ.வி. சண்மு கம், மாநிலத் தலைவர் கோபி, மாநி லச் செயலாளர் கங்காதுரை, தமிழ்  நாடு விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் சி.எஸ்.மகா லிங்கம், மாவட்ட துணைத் தலை வர் ஜி.நரசிம்மன், தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்க மாவட்டத் தலை வர் ஜெயராமன், தமிழ்நாடு வேட் டைக்காரன் பழங்குடியின மக்கள் சங்க மாவட்டத் தலைவர்கள் வரத ராஜன், வீராசாமி ஏலகிரி பகுதி மலை வாழ் மக்கள் சங்கத் தலைவர் மனோ கரன், கீழானூர் கிளைத் தலைவர் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.