கிருஷ்ணகிரி, ஜூன் 28- கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப் பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை யாற்றில் நீர் வெளியேறி கேஆர்பி அணைக்கு செல்கிறது. இந்த ஆற்றின் வலது கால்வாய் ஆலியாளம், போடூர், சுப்பகிரி, காமன் தொட்டி, பாத்தகோட்டா, கடுஞ்சூர் வழியாக துரை ஏரிக்குச் செல்கிறது. அதன் மூலம் 1,500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்தக் கால்வாய் தூர் வாரப்படாமல் குறுகியும், புதர் மண்டி பல இடங்களில் மண் மேடாகிப் போனதால் அதில் வரும் நீரின் அளவு குறைந்து போனது. இதனால் விவ சாயத்திற்கு ஏரியிலிருந்து கிடைக்கும் நீர் குறையத் தொடங்கியது. இந்த ஏரியிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் 540 ஏக்கர் பரப்பில் 1984இல் சின்னாறு அணை கட்டப்பட்டது. பேரிகை,செட்டிப்பள்ளி, சூளகிரி அத்திமுகம், கட்டிகாணப் பள்ளி பகுதிகளில் பெய்யும் மழை நீரால் இந்த அணை நிரம்பி 2,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது. போதிய மழையின்மையால் கடந்த 3 ஆண்டுகளாக ஏரி வறண்டு கிடக்கி றது. இதனால் விவசாயத்திற்கு போதிய நீரின்றி, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வலது கால்வாயில் உள்ள முட்புதர் களை அகற்றி, தூர் வாரி சீரமைக்க வேண்டும், கால்வாயை 3 கி.மீட்டருக்கு நீட்டித்து சின்னாறு அணையையும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத் திற்கும் கோரிக்கை விடுத்துள்ளது.