கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் 50-க்கும் மேற்பட்ட சிறு சிறு மலை கிராமங்கள் நிறைந்த பகுதியாகும். இந்த கிராமங்களில் 10,15,20 என நெடுந்தொலைவில் காடுகளுக்குள் வீடுகள் உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் அடங்கிய குடியிருப்புகள் 10 க்கும் மேல் உள்ளது. இந்த குடியிருப்புகளுக்கு செல்ல சாலை வசதி கிடையாது. ஒற்றையடிப் பாதை வசதிக்கூட இல்லாதது பரிதாபமாகும்.தேன்கனிக்கோட்டை-அஞ்செட்டி சாலையில் பிரியும் கொத்தூர் சாலை வர்ணிக்க முடியாத அளவு உள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த சாலையில் நடந்து செல்லவே முடியாது. வாகனங்களின் நிலைமை அதோ கதிதான். அந்த அளவுக்கு குண்டும் குழியுமாக, கந்தல் கந்தலாக கவனிப்பார் அற்று அனாதை பிள்ளைகள் போல கிடக்கிறது. கொத்தூர் சாலையிலிருந்து பிரியும் உச்சனப் பள்ளி சாலையும் கசக்கி எறியப்பட்ட காகிதம் போல உள்ளது. உச்சனப்பள்ளி ஊர் முன்பு தரைப்பாலம் உடைந்து இரண்டு ஆண்டுகளாக ஆள் விழுங்கும் பள்ளம் போல விபத்துகளை ஏற்படுத்திக் கொண்டிருக் கிறது. இந்த நிலை இங்கு மட்டுமல்ல தேன்கனிக்கோட்டை வட்டம் முழுவதும் உள்ளது. வட்ட வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர், சாராட்சியர் தலையிட்டு உடனடியாக சாலைகளை சீரமைக்க வேண்டும். சாலைகள் பாதை கள் இல்லாத குடியிருப்புகளுக்கு சாலை வசதிகள் அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் வெங்கடேஷ், வாலிபர் சங்கச் செயலாளர் முத்து, விவசாயிகள் சங்கச் செயலாளர் அனுமப்பா மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.
-ஒய்.சந்திரன்