tamilnadu

இறந்தோர் வாரிசுகளுக்கு ஐவிடிபி பாதுகாப்பு நிதி

கிருஷ்ணகிரி, பிப். 17- சுய உதவிக் குழுவின் உறுப்பினர்களில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு   ஐவிடிபி தொண்டு நிறுவனம் வாழ்க்கை பாதுகாப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சி புனித அன்னாள் மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி இந்தியன் வங்கி மண்டல மேலாளர் திருமாவளவன், தமிழ்நாடு கிராம வங்கி மண்டல மேலாளர் பாஸ்கரன், திருப்பத்தூதூர் புனித தூய நெஞ்ச கல்லூரி உளவியல் துறை தலைவர் அருட்தந்தை சஞ்சை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஐவிடிபி தொண்டு நிறுவனத்தின் தலைவர் ராமன் மகசேசே விருதாளர் குழந்தை பிரான்சீஸ் தலைமை தாங்கி இறந்தோரின் 841 வாரிசுகளுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதமும், விபத்தில் நிரந்தர ஊனமுற்ற 8 பேருக்கு ரூ. 25 ஆயிரம் வீதமும் நிதி வழங்கினார். முடிவில் தாயின் பெருமையை உணர்த்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.