கிருஷ்ணகிரி, ஜூன் 29- கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் நாகனஹள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட சென்றாம்பட்டி, குமரன் கொட்டாயில் 45க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. கடந்த 60 ஆண்டுகளாக இந்த ஊருக்கு சாலை வசதி செய்யப்படாததால், தனியார் பட்டா நிலத்தின் மீது ஒற்றையடிப் பாதையில்தான் மக்கள் சென்று வருகின்றனர். ஊருக்கு சாலை வசதி இல்லாததால் வண்டிகளில் தண்ணீர் கொண்டு வரவும், கால்நடை களுக்குத் தீவனங்கள், விவசாய இடுபொருட்கள் வாங்க, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவும், அவசரக் காலத்தில் மருத்துவத்திற்கு ஆம்புலன்ஸ் வந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இவர்கள் பயன்படுத்தும் ஒற்றையடிப் பாதை யும் அவ்வப்போது நில உரிமையாளர்களால் அடைக்கப் பட்டு விடுவதால் போக்குவரத்திற்கும், இறந்தவர்கள் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லவும் வழி யில்லாமல் பல நேரம் கடும் நெருக்கடிக்கு உள்ளா கின்றனர்.
சுகாதார கழிப்பறை வசதிகள் அரசு அமைத்துத் தராததால் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளைக் கழித்து வருகின்றனர். இதனால் அடிக்கடி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.ஊருக்கு வெளி யில் உள்ள ஒரே கிணற்றில்தான் அனைத்து குடும்பங்க ளும் நீர் எடுக்க வேண்டிய நிலை உள்ளது. சிறு விவசாயத் திற்கும் இந்த கிணற்று நீரே பயன்பட்டு வருவதால் கோடைக் காலத்தில் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்படுகிறது. தண்ணீர் இல்லாததால் பயிர் சாகுபடி முற்றி லும் அழிந்தும் போயுள்ளது. இதனால் வாழ்வாதார மான ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போச்சம்பள்ளி வட்ட நிர்வாக மும், நாதரசம்பட்டி பேரூராட்சியும் இந்த கிராம மக்க ளுக்கு சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி களை ஏற்படுத்தித்தர வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.