tamilnadu

img

தீக்கதிர் வளர்ச்சி நிதி

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.நடராஜன் இல்லத் திருமண விழா ஓசூரில் நடைபெற்றது. முன்னதாக நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ‘தீக்கதிர்’ வளர்ச்சி நிதியாக ரூ. 5 ஆயிரத்தை  குடும்பத்தின் சார்பில் சிபிஎம்  மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ஜெயராமனிடம் வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேகர், இருதயராஜ், சுரேஷ், சாம்ராஜ், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, நஞ்சுண்டன் ஒன்றியச் செயலாளர்கள் பிஜி. மூர்த்தி, வெங்கடேஷ், சேது மாதவன், அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் சந்திரன், பொருளாளர் தேவராஜ், முன்னாள் செயலாளர் சி.பி.  ஜெயராமன் மற்றும் நிர்வாகிகள்  கலந்து கொண்டு மணமக்கள் அரவிந்தன் - ஐஸ்வர்யாவை வாழ்த்தினர்.