tamilnadu

img

தேசிய மருத்துவக் கொள்கையை கைவிட வலியுறுத்தி சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தேசிய மருத்துவக் கொள்கையை கைவிட வலியுறுத்தி சிபிஎம் சார்பில் ஓசூர் ராம் நகரில் ஒன்றியச் செயலாளர் பி.ஜி.மூர்த்தி தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ஜெயராமன் உள்ளிட்ட பலர் 
கலந்துகொண்டனர். விழுப்புரம் தெற்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நகரச் செயலாளர் கே.தங்கராசு தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, செயற்குழு உறுப்பினர்கள் எம்.கே.பூவராகன், டி.எம்.ஜெய்சங்கர், ஏ.வி.ஸ்டாலின்மணி, எம்.ஆறுமுகம், ஆர்.சீனிவாசன், டி.எஸ்.மோகன் ஆகியோர் பேசினர். அதேபோல் சின்னசேலம், கண்டாச்சிபுரம், சங்கராபுரம் ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.