கிருஷ்ணகிரி, ஜூலை 22- கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் ஒன்றியத்தில் உள்ளது இருளப்பட்டி கிரா மம். இங்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு இருளர்களுக்காக கட்டி கொடுக்கப்பட்ட 55 தொகுப்பு வீடுகளிலும், புறம்போக்கு நிலத்தை விலைக்கு வாங்கியும் சுமார் 75 குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள பல தொகுப்பு வீடுகளின் மேற்கூரையின் காரைகள் பெயர்ந்துள்ளன. இதனால் மழைக் காலங்க ளில் தண்ணீர் வீடுகளுக்குள் ஒழுகுகிறது. வாரத்தில் சில நாட்கள் மட்டுமே தோட்ட வேலையின் மூலம் கிடைக்கும் மிகக் குறைந்த வருமானத்தை வைத்து குடும்பம் நடத்த வேண்டிய சூழ்நிலை. இங்குள்ளவர்களுக்கு தனி யான மயான இடம் இல்லாத தால் இறந்து போனவர்களை ஓடையோரம், சாலை யோரம், தங்கள் சிறிய நிலத் தோரம் புதைக்க வேண்டிய அவலம் நிலவி வருகிறது.
2017ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில்10 பெண்களுக்கு 100 நாள் வேலை அட்டை வழங்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு அந்த வரு டத்தில் 6 நாட்களும், அடுத்த ஆண்டு 15 நாட்களும் மட்டுமே வேலை வழங் கப்பட்டது. 50 ஆண்டுக ளுக்கும் மேலாக இங்கு வசிக்கும் மக்களுக்கு பட்டா கொடுக்க அரசு நிர்வாகம் மறுக்கிறது. முறையான கழிப்பிட வசதி இல்லாத தால் திறந்த வெளியிலேயே இயற்கை உபாதைகளை கழிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அடிப்படை வசதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. எனவே தொகுப்பு வீடுகளை சீரமைக்கவும், பேருந்து வசதி, சாலை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப் படை வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என்று அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.