கிருஷ்ணகிரி, ஆக. 27- கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சிங்காரப்பேட்டை அருகில் உள்ள மகனூர்பட்டி கிராமத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு ராமர் என்பவருடைய பசுமாடும், கன்றுக்குட்டியும் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தது. அதே பகுதியில் உள்ள சுரேஷ் என்பவருடைய சினை மாடும் அதேபோல் சுருண்டு விழுந்து உயிரிழந்தது. ராமர் என்பவருடைய மாடும் கன்றும் இறந்த போது கோமாரி நோய் தடுப்பூசி போடாத காரணத்தினால் இறந்திருக்கலாம் என பலரும் எண்ணி யிருந்த நிலையில், ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்ட சினை மாடும் உயிரி ழந்தது கால்நடை வளர்ப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் அரூர் பகுதிகளில் ஆந்தராக்ஸ் பரவி வருவதாக கூறப்படும் நிலையில், அருகே உள்ள ஊத்தங்கரை வட்டம் மற்றும் சிங்காரப்பேட்டை பகுதியிலும் இந்த நோய் தாக்கம் பரவியுள்ளதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே உடனடியாக கால்நடை மருத்துவர்கள் ஆந்தராக்ஸ் பரவலா அல்லது வேறு என்ன நோய் என கண்டறிய மருத்துவ முகாம் நடத்த வேண்டும், இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் எத்திராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.