tamilnadu

img

கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா.... பச்சை மண்டலத்தை இழக்கிறது? 

கிருஷ்ணகிரி
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் 2,526 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், ஒரு மாவட்டம் பச்சை மண்டலமாகவும் (கிருஷ்ணகிரி) அறிவிக்கப்பட்டு (கிருஷ்ணகிரி) இருக்கிறது.   

இந்நிலையில், இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாமல் இருந்த தமிழகத்தின் வடக்கு எல்லை மாவட்டமான கிருஷ்ணகிரியில் 67 வயது முதியவர் ஒருவர் ஆந்திராவில் பணியாற்றித் திரும்பி வந்த நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதியாகியுள்ளது.  

இதனால் மாநில அரசால் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அந்த பெருமையைக் கிருஷ்ணகிரி மாவட்டம் இழக்கும் நிலை உருவாகியுள்ளது.  
 

;