tamilnadu

img

ஆணவப்படுகொலை வழக்கில் சரணடைந்தவர்களை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

கிருஷ்ணகிரி ஆணவப்படுகொலை வழக்கில் சரணடைந்த 2 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.


 கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் (28) என்ற இளைஞர், ஒரு பெண்ணை காதலித்து பெண்வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டதற்காக ஆணவப்படுகொலை செய்யப்பட்டார்
இந்த வழக்கில் பெண்ணின் தந்தை உட்பட 2 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களை போலீஸ் காவலில் விசாரிக்க கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றம் அனுமதி மறுத்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்து  உத்தரவிட்டுள்ளது