tamilnadu

img

ஆற்றில் மூழ்கி 3 சிறுமிகள் பரிதாப பலி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பம் அருகே கல்வாரி செப்பல் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி படித்த மாணவிகள் மாணவிகள்  அனுசுகா, சித்ரா, ஜெசுப்ரியா ஆகியோர் அருகில் இருந்த ஆற்றில் குளிக்கச் சென்றனர். அவர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த சிறுமிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.