நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இலங்கை நாட்டிற்குச் சுற்றுப்பய ணம் மேற்கொண்டு தற்போது டெஸ்ட் தொட ரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்ட த்தில் (காலே) இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இலங்கை அணியின் 2-வது இன்னிங்ஸில் (பேட்டிங் செய்த பொழுது) நியூஸிலாந்து கேப்டன் கனே வில்லியம்ஸன் பகுதி நேரமாக 3 ஓவர்கள் வீசினார். வில்லியம்ஸனின் பந்துவீச்சு ஐசிசி விதிமுறைக்கு முரண்பட்டு இருப்பதாக கூறி கள நடுவர்கள் போட்டி நடுவரிடம் புகார் அளித்தனர்.
போட்டி நடுவர் ஐசிசி-க்கு சுற்றறிக்கை அனுப்பிய நிலையில், துரித நடவடிக்கை யில் களமிறங்கிய ஐசிசி 14 நாட்களுக்குள் வில்லியம்சன் தனது பந்துவீச்சைப் பரி சோதனைக்கு உட்பட்டுச் சரிசெய்து கொள்ள வேண்டும் என நியூஸிலாந்து கிரிக் கெட் வாரியத்திற்குக் கெடு விதித்துள்ளது. அதேபோல இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அகிலா தனஞ்ஜெயாவும் பந்துவீச்சு சர்ச்சையில் சிக்கி ஐசிசி-யின் முடிவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். தனஞ்ஜெயா 2 இன்னிங்ஸிலும் சேர்த்து 6 விக்கெட் வீழ்த்திய முன்னணி சுழற்பந்துவீச்சாளர் என்பதால் ஐசிசி முடிவு எப்படி இருக்குமோ என்ற அச்சத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியம் உள்ளது.
ஐசிசி-யின் நடவடிக்கை என்ன?
பெரும்பாலும் மணிக்கட்டைச் சுழற்றுவதில் தான் சர்ச்சை உருவாகிறது. பந்துவீச்சு சர்ச்சையில் சிக்குபவர்களுக்கு ஐசிசி 14 நாட்கள் கெடு விதிக்கும். தீவிர பயிற்சிக்குப் பின்னர் பரிசோதனை நடத்தப்படும்.பரிசோதனையின் முடிவிலும் மணிக்கட்டைச் சுழற்றினால் தடை (பந்துவீச மட்டும்) விதிக்கப்படும். அதேபோல பரிசோதனைக்கான முடிவு வரும் வரை சர்ச்சையில் சிக்கிய நபர் தொடர்ந்து பந்து வீசலாம் என்பது குறிப்பிடத்தக்கது.