டிஎன்பிஎல் தொடரின் 4-வது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திண்டுக்கல், சென்னை, மதுரை, காஞ்சிபுரம் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றன. திண்டுக்கல் - சென்னை அணிகள் மோதிய “குவாலிபையர் - 1” ஆட்டத்தில் சென்னை அணி திரில் வெற்றியுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. வெளியேறுதல் சுற்று எனப்படும் எலிமினேட்டர் ஆட்டத்தில் மதுரை அணி காஞ்சிபுரம் அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மதுரை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று(கு-2) சுற்றுக்கு முன்னேறியது. இந்நிலையில் பிளே ஆப் சுற்றின் இறுதி நிகழ்வான “குவாலிபையர் - 2” ஆட்டத்தில் “குவாலிபையர் - 1” இல் தோல்வியை ருசித்த திண்டுக்கல் அணியும், எலிமினேட்டர் ஆட்டத்தில் வெற்றி பெற்ற மதுரை அணியும் செவ்வாயன்று பலப் பரீட்சை நடத்து கின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.