tamilnadu

img

இன்னும் 9 நாட்கள் உலகக் கோப்பை திருவிழா இங்கிலாந்து 2019

“பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்” என்ற பழமொழிக்கு ஏற்ப தனது அபார ஆட்டத்தால் கிரிக்கெட் உலகை நடுங்க வைக்கும் அபாயகரமான அணியான தென் ஆப்பிரிக்காவைப் பற்றி இன்று பார்க்கலாம்...

கேப்டன் : பாப் டு பிளஸிஸ்  

பேட்ஸ்மேன்கள் : எய்டன் மார்க்ராம், பாப் டு பிளஸிஸ், டேவிட் மில்லர், ஹாசிம் அம்லா, ரஸ்ஸி வான்டெர் டூசன் 

ஆல்ரவுண்டர்கள் : ஜீன்-பால் டுமினி, ஆன்டிலே பெஹ்லுக்வாயோ, கிறிஸ் மோரிஸ், டிவைன் பிரெடோரியஸ். 

விக்கெட் கீப்பர் : குயின்டன் டி காக்

பந்துவீச்சாளர்கள் : டேல் ஸ்டெய்ன், லுங்கி நிகிடி, இம்ரான் தாஹீர், காகிஸோ ரபடா, தப்ரியாஸ் ஷம்ஸி.

அணியின் சிறப்பு 

பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்று பிரிவுகளிலும் சிறப்பாகச் செயல்படுவார்கள்.140 கிமீ உட்பட்டுப் பந்துவீசினாலும் ஸ்விங்,பவுன்சர் கலந்த கலவையோடு மிரட்டலாக பந்துவீசுவார்கள்.பவர்பிளே,பகுதி நேரம் எதுவாக இருந்தாலும் ஒரே மனநிலையில் களத்தில் சுழலுவார்கள். தேவையில்லாமல் வம்பு சண்டைக்கு (ஸ்லெட்ஜிங்) செல்ல மாட்டார்கள். எதிரணி சீண்டினாலும் அமைதி மூலம் பதிலடி கொடுப்பார்கள்.

வீரர்கள் தேர்வு எப்படி? 

பேட்டிங், பந்துவீச்சு, ஆல்ரவுண்டர் என மூன்று பிரிவுகளிலும் தென் ஆப்பிரிக்கா அணி மிகுந்த பலத்துடன் உள்ளது.மைதான சூழ்நிலைக்கு ஏற்ப ஆடும் லெவனை தேர்வு செய்தால் அணிக்குக் கூடுதல் நன்மை கிடைக்கும்.வேகம் கலந்த சுழற்பந்து வீச்சை வீசும் இம்ரான் தாஹீர் அணியில் இருப்பது சாதகமான சூழலை உருவாக்கும்.  

பலம் : பந்துவீச்சு தான் தென் ஆப்பிரிக்கா அணியின் முக்கிய பலம். அதிவேகமாக பந்துவீசாவிட்டாலும் மிரட்டலான பவுன்சரை வீசி எதிரணியை திணறடிப்பார்கள்.கடினமான இலக்காக இருந்தாலும் பதற்றமில்லாமல் சேசிங் செய்வது தனிச்சிறப்பு. பந்து - ரன்கள் விகிதத்தைச் சீரான ரேட்டில் நிலை நிறுத்துவார்கள். கடைசி கட்டத்தில் (40-50 ஓவர்களில்) அதிக ரன்களை வாரி வழங்க மாட்டார்கள். 

பலவீனம் : மற்ற சர்வதேச தொடர்களில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தரவரிசையில் நல்ல நிலையிலிருந்தாலும் உலகக்கோப்பை தொடரில் மட்டும் பதற்றமாக களமிறங்கி லீக் சுற்றிலேயே வெளியேறுவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பது.கத்துக்குட்டி அணிகளைக் குறைவாக மதிப்பிட்டு தோல்வியைத் தழுவுவது.   

இங்கிலாந்து மண்ணில் எப்படி? 

தென் ஆப்பிரிக்கா நாடு இங்கிலாந்து நாட்டிற்கு அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளாது.2 வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே அந்நாட்டிற்குச் செல்லுவதால் வானிலை மற்றும் மைதானத்தைக் கணிக்கச் சிரமம் ஏற்படும்.ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகளின் சீதோஷ்ண நிலையைக் கணக்கில் வைத்து விளையாடினால் வெற்றியைக் குவிக்கலாம்.  

உலகக்கோப்பையில் சாதிக்குமா? 

வீரர்கள் அனைவரும் சூப்பர் பார்மில் இருப்பதால் அரையிறுதி வரை தென் ஆப்பிரிக்கா அணிக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை.பழக்கமில்லாத சீதோஷ்ண நிலை மட்டும் தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு சற்று சிக்கலான விஷயம். அவற்றை சமாளித்தால் இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகளிடம் சிக்கல் இல்லாமல் வெற்றியைக் குவிக்கும்.மற்ற அணிகளை எளிதாக வீழ்த்தினாலும் ஆஸ்திரேலியா, இந்திய அணிகளை வீழ்த்துவது சற்று சிரமமான காரியம் என்பதால் கோப்பை பற்றி சிந்திக்க முடியாது.


நாளை இலங்கை...