tamilnadu

img

இன்னும் 8 நாட்கள் உலகக் கோப்பை திருவிழா இங்கிலாந்து 2019

வங்கதேச அணியின் முக்கிய வில்லன், இந்தியாவின் அண்டை நாடான இலங்கை பற்றி இன்று பார்க்கலாம்.

கேப்டன்: திமுத் கருணாரத்னே 

பேட்ஸ்மேன்கள்: லாஹிரு திரிமன்னே, திமுத் கருணாரத்னே, அவிஸ் பெர்னாண்டோ.  

ஆல்ரவுண்டர்கள்: ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்ஜெயா டி சில்வா, இசுரு உதானா, மிலின்டா சிறிவர்தனா, திசாரா பெரேரா, ஜீவன் மெண்டிஸ்.

விக்கெட் கீப்பர்கள்: குஷால் மெண்டிஸ், குஷால் பெரேரா.

பந்துவீச்சாளர்கள்: லசித் மலிங்கா, ஜெப்ரி வாண்டர்சே, சுரங்கா லக்மல், நுவான் பிரதீப்.   

அணியின் சிறப்பு:

இந்திய அணியைப் போல பலமான பந்துவீச்சு யூனிட்டுடன் களமிறங்கி வெற்றியைக் குவிக்கும்.எந்தவிதமான ஆடுகளமாக இருந்தாலும் சரி பேட்ஸ்மேன்கள் அதிரடியுடன் ஜொலிப்பார்கள்.தோல்வியின் விளிம்பிலிருந்தாலும் சளைக்காமல் வெற்றிக்காகப் போராடுவார்கள்.எதிரணி பேட்ஸ்மேன்கள் சற்று அசந்தால் தனது மிரட்டலான பந்துவீச்சு மூலம் புரட்டி எடுத்து விடுவார்கள்.    

வீரர்கள் தேர்வு எப்படி? 

லசித் மலிங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், சுரங்கா லக்மல், லாஹிரு திரிமன்னே, திசாராபெரேரா ஆகியோர் மட்டுமே சர்வதேச அளவில் நன்கு பழுத்தவர்கள். மற்ற வீரர்கள் பார்ம்,காயம் பிரச்சனையால் அடிக்கடி வந்து செல்பவர்கள் என்பதால் வீரர்கள் தேர்வின் நிறை,குறை பற்றி சொல்ல முடியாது. பந்துவீச்சில் மட்டும் நட்சத்திர வீரர்கள் பலர் இருப்பதால் அந்த துறையில் பிரச்சனை ஏற்படாது.

பலம்

அதிரடிக்கு பெயர் பெற்ற குஷால் பெரேராவேகப்பந்துகளை அசத்தலாக எதிர்கொண்டு சீரிய கவனத்துடன் ரன் குவிப்பது. யார்கர் மன்னன் மலிங்காவின் அனுபவம், ஆல்ரவுண்டர் திசாரா பெரேராவின் மிரட்டலான ஆட்டம் ஆகியவை மூலம் இலங்கை தடுமாற்றம் இல்லாமல்வெற்றியைக் குவிக்கும்.

பலவீனம்   

இளம் வீரர்கள் அணியில் அதிகம் இருப்பதால் பேட்டிங்கில் முரட்டுத்தனமாக விளையாடி விரைவாக பெவிலியன் திரும்புவது. இக்கட்டான சூழ்நிலையில் அணிக்குக் கைகொடுக்கும் நிரோஷான் டிக்வெல்லா அணியில் இடம்பெறாதது. ஆல்ரவுண்டர் பிரிவு கவலையளிக்கும் நிலையில் இருப்பது.அனுபவமிக்க லசித் மலிங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், திசாரா பெரேரா ஆகியோர் அணியில் இருக்கையில் குறைந்த அனுபவமுடைய திமுத் கருணாரத்னேவை கேப்டனாக நியமித்தது எந்தளவுக்குப் பின்விளைவை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இங்கிலாந்து மண்ணில்

இங்கிலாந்து ஆடுகளம் இலங்கை அணிக்கு நன்கு பழக்கப்பட்டவை என்பதால்லீக் சுற்று வரை பிரச்சனை ஏற்படாது.பலமானவேகப்பந்துவீச்சு யூனிட் இருப்பதால் கூடுதல்சாதகத்தை உருவாக்கும்.

உலகக்கோப்பையில் சாதிக்குமா? 

கிரிக்கெட் உலகில் இலங்கை அணி பலமான அணியாக இருந்தாலும், 12-வது சீசன்உலகக்கோப்பை தொடரில் பலவீனமாககத்துக் குட்டியைப் போன்று களமிறங்குகிறது.வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்,விண்டீஸ் ஆகிய அணிகள் சரிசம பலத்தில் இருப்பதால், இந்த அணிகளை சிரமமின்றி வீழ்த்தினால் அரையிறுதி பற்றிச் சிந்திக்கலாம்.கோப்பைக்காக கங்கணம் கட்டி நிற்கும் இந்தியா,ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து ஆகிய அணிகளை வீழ்த்துவது சிரமம் தான் என்றாலும், லசித்மலிங்கா,குஷால் மெண்டிஸ், திசாரா பெரேரா,லாஹிரு திரிமன்னே ஆகியோர் மாயாஜாலம் நிகழ்த்தினால் அரையிறுதி வரை பிரச்சனை இன்றி செல்லும். பிறகு கோப்பையைக் கையில் ஏந்துவது பற்றி கனவு காணலாம்.

நாளை விண்டீஸ்...