உலகக்கோப்பைப் கிரிக்கெட் தொடரின் நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி 136 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.
கிரிக்கெட் விளையாட்டின் ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பைத் தொடர் கடந்த 30ம் தேதி துவங்கியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸை வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து பவுலியன் திரும்பினர். தொடக்க வீரர்களில் திமுத் கருனரத்னே மட்டும் கடைசி வரை அவுட் ஆகாமல் 52 ரன்களை சேர்த்தார். இறுதியாக 29.2 ஓவர் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. நியூஸிலாந்து அணி 137 ரன்கள் எடுத்தால் என்ற எளிய இலக்குடன் இன்னும் சிறிது நேரத்தில் களமிறங்கவுள்ளது.