இலங்கை கிரிக்கெட் அணியின் அனுபவ பந்துவீச்சாளர் லசித் மலிங்கா வங்கதேசத்துக்கு எதிரான தொடருடன் ஒருநாள் போட்டிகளிலிருந்து (முதல் போட்டி யுடன்) ஓய்வு பெறப்போவதாக அந்த அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே தெரிவித்தார். அதன் பின்னர் மலிங்காவும் வெளிப்படையாக ஓய்வு முடிவை அறிவித்தார். மலிங்கா ஓய்வு விவகாரம் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சி யை ஏற்படுத்திய நிலையில், இலங்கையின் மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் குலசேகரா வும் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாகப் புதனன்று அறிவித்தார். 37 வயதாகும் குலசேகரா பார்ம் மற்றும் உடல் தகுதி பிரச்சனையால் 2017-ஆம் ஆண்டு ஜூலைக்குப் பிறகு அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.அதன்பின் சர்வதேச போட்டியில் விளையாடுவதைப் பற்றிக் கண்டு கொள்ளாத குலசேகரா புதனன்று ஓய்வு முடிவை அறிவித்தார். இலங்கை அணிக்காக 21 டெஸ்ட் (48 விக்.,), 184 ஒருநாள் (199 விக்.,), 58 டி-20 (66 விக்.,) ஆட்டங்களில் விளையாடியுள்ள நுவன் குலசேகரா ஒருநாள் ஆட்டங் களில் சிறந்த பேட்ஸ்மேனாகவும் ஜொலித்துள்ளார். ஐபிஎல் தொடரில் தமிழக அணியான சென்னை அணிக்காகவும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.