tamilnadu

img

உலக கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ஷேவாக

உலக கோப்பை போட்டியில் இந்திய-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்துக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆட்டக்காரர் ஷேவாக் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கோவாவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஷேவாக் அளித்த ஒரு பேட்டியில், அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ”இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதுவது என்பதே கிட்டத்தட்ட ஒரு போர் போன்றது தான். அதில் நாம் வெற்றி பெற வேண்டும். தோற்கக்கூடாது” என்று ஷேவாக் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, புல்வாமா தாக்குதலை ஒட்டி இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ), உலக அமைப்பும் அதன் உறுப்பினர் நாடுகளும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுடன் உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) வலியுறுத்தியது. ஆனால் ஐசிசி அந்த கோரிக்கையை நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


;