விளையாட்டு உலகில் முரட்டுத்தனத்துக்குப் பெயர் பெற்ற ரக்பி தொடரின் 9-வது உலகக்கோப்பை தொடர் ஜப்பான் நாட்டில் நடைபெற்றது. தொடக்கம் முதலே சுவாரஸ்யமாக நடைபெற்ற இந்த தொடரில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகள் ஆதிக்கம் செலுத்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. சனியன்று ஜப்பானின் முக்கிய நகரான யோக்கோகாமாவில் உள்ள நிசான் நிறுவனத்திற்குச் சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோப்பைக்காக ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர். ஆரம்பத்திலிருந்தே அசத்தலாக விளையாடிய தென் ஆப்பி ரிக்க அணி என்ற 32-12 புள்ளி கணக்கில் வெற்றி பெற்று மூன்றா வது முறையாக உலகக்கோப்பையை முத்தமிட்டது.