கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் மற்றும் இதர உறுப்பினர் களுக்கான தேர்தல் வியாழனன்று நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான முடிவுகள் வெள்ளியன்று அறிவிக்கப்பட்டன. தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும், கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவருமான ரோஜர் பின்னியும், எம்.எம். ஹரிஸ் ஆகியோர் நேருக்கு நேர் மோதினர். வாக்கு எண்ணிக்கை முடிவில் ரோஜர் பின்னி 943 வாக்குகள் பெற்று தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எம்.எம். ஹரிஸ் 111 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியைச் சந்தித்தார். 1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்ற முக்கியக் காரணமாக இருந்த ரோஜர் பின்னி அந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சிறப்புப் பெருமையைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.