இங்கிலாந்து நாட்டின் கால நிலைப்படி ஜூலை முதல் அக்டோபர் வரை மழை பொழியும். காலநிலை பற்றி கணித்ததோ இல்லையோ ஜூலை மாதம் தானே மழை பெய்யும் என சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) உலகக்கோப்பை தொடரை நடத்த இங்கிலாந்து நாட்டிற்கு உரிமம் அளித்தது. ஐசிசி-யின் துரதிர்ஷ்டம் மே முதல் வாரத்திலேயே இடைவெளி யில்லாமல் மழை பெய்து இங்கிலாந்து நக ரங்களைக் கடற்கரை போல் மாற்றியது. எனினும் ஜூன் முதல் வாரத்தில் களைத்த மழை ஒரு வாரம் ஓய்வு எடுத்து இரண்டாம் வாரத்தில் ஆட்டத்தை ஆர ம்பித்தது. இதனால் சில உலகக் கோப்பை ஆட்டங்கள் மழையால் தடை பட கிரிக்கெட் ரசிகர்கள் ஐசிசி-யை எண்ணெய் ஊற்றாமல் வறுத்தெடுத்த னர். கனமழை பெய்த காலங்களில் டிக்கெட் விற்பனை மந்தமாக இருந்தது. மேலும் ஸ்டார் போன்ற தொழிநுட்ப நிறுவனங்களின் கல்லாப்பெட்டியில் மழை கைவைத்து நஷ்டத்தை ஏற்படுத்தி யது. இந்நிலையில் இங்கிலாந்து நகரங் களில் மழை குறைந்து வெயில் அடிக்க ஆரம்பித்துள்ளது. இருப்பினும் பிற்பகலில் குளிர்ந்த காற்று பலமாக வீசு வதால் மேகக்கூட்டங்கள் தாறுமாறாக மைதானத்தைச் சுற்றி வருகின்றன. இத னால் அரையிறுதிக்கு முன்னேறும் முனை ப்பில் தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டு வரும் நாடுகள் மழையால் தங்களது வெற்றிப் புள்ளிகள் பறிபோய்விடுமோ என அச்சத்துடன் இருக்கின்றனர். உலகக் கோப்பை தொடரின் சுவாரஸ்யத்திற்கு மழை தான் மிகப்பெரிய எமனாக இருப்ப தால் ரசிகர்களுக்கு எரிச்சல் உருவாகிறது.