வெஸ்ட் இண்டிஸ் வீரர் நிகோலாஸ் பூரன் 4 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக, வெஸ்ட் இண்டிஸ் வீரர் நிகோலாஸ் பூரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. போட்டியின் போது, தனது விரல் நகத்தினால் பந்தின் தன்மையை மாற்றி சேதப்படுத்தியது வீடியோவில் பதிவானது. இந்தக் குற்றச்சாட்டை நிகோலாஸ் ஒப்புக் கொண்டதை அடுத்து, அவருக்கு 4 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை உத்தரவை ஐசிசி பிறப்பித்தது. இதனையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 டி20 போட்டிகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான ஒரு டி20 போட்டிகளில், நிகோலாஸ் பூரன் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அவரது கணக்கில் 5 தகுதியிழப்புப் புள்ளிகள் ஏறியுள்ளது.