இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடுவிடம் துடிப்பான செயல்பாடு இல்லை என்பதைக் காரணம் காட்டி 12-வது சீசன் உலகக்கோப்பை தொடரில் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் வயதிலும், கிரிக்கெட்டிலும் இளையவரான விஜய் சங்கருக்கு இடம் கிடைத்தது. விஜய் சங்கர் தேர்வு குறித்து ராயுடு தனது ஆதங்கத்தை வெளிப்படையாகத் தெரிவித்துத் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் ஷிகர் தவான், விஜய் சங்கர் ஆகியோர் காயம் காரணமாக நீக்கப்பட்டனர். இதன்மூலம் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த ராயுடுவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஷிகர் தவான், விஜய் சங்கருக்கு பதிலாக இளம் புயல்களான ரிஷப் பண்ட், மயாங்க் அகர்வால் சேர்க்கப்பட்டனர். உலகக்கோப்பை தொடரில் தன்னை மட்டும் புறக்கணிப்பதாக எண்ணி வருத்தப்பட்ட அம்பத்தி ராயுடு அனைத்து வகையான போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார்.
ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியத்தில் இணைவாரா?
ஐரோப்பா கண்டத்தின் குட்டி நாடான ஐஸ்லா ந்து, “தங்கள் நாட்டு அணிக்காக அம்பத்தி ராயுடு விளையாட வந்தால் அவருக்கு நிரந்தர குடி யுரிமை அளிக்கத் தயார்” என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மூலம் அழைப்பு விடுத்தது. ஆனால் இதுகுறித்து ராயுடு எவ்வித பதிலும் அளிக்கவில்லை என்றாலும் ஐஸ்லாந்து நாட்டின் டுவிட்டர் அழைப்புக்குப் பின்னரே ஓய்வு முடிவை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.