tamilnadu

img

ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி தொடங்குகிறாரா தோனி?

இந்திய அணியின் மூத்த வீரரான தோனி, ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை தொடங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான தோனி, துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய விளையாட்டில் இருந்து இரண்டு மாத ஓய்வு எடுப்பதாக பிசிசிஐக்கு தெரிவித்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. தற்போது அவர், காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார். 

இதை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை தொடங்க தோனி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த அகாடமியில், இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வழங்க உள்ளதாகவும், இது தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறையுடன் கலந்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.