கிர்கிஸ்தானில் தலைநகர் பிஷ்கேக் நகரில் விளையாட்டு உலகமே இதுவரை அறியப்படாத வகையில் வித்தியாசமான சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. செஸ், கேரம் போன்ற போட்டிகளைப் போன்று வேறு எங்கும் ஓடியாடி விளை யாட முடியாதபடி நடத்தப்படும் எளிய விளையாட்டு தான் என்றாலும், இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்குக் கன்னம் பழுக்கும், பற்கள் தெறிக்கும். புரியவில்லையா? எதிரெதிராக இரு வர் நின்று கொண்டு கன்னத்தில் அறைய வேண்டும். அடிவாங்குபவர் நிலைகுலை யாமல் அடியைப் பொறுத்துக் கொண்டு தன்னை அறைந்தவரின் கன்னத்தை மீண்டும் அறைய வேண்டும். இவ்வாறு 5 முறை அறைவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். இந்த 5 வாய்ப்பு களில் யார் இடத்தை விட்டு நகராமல் போட்டியிலிருந்து விலகாமல் இருக்கிறாரோ அவர் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவர். 2019-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் தொடரில் அமன் அய்தராவ் என்ற 23 வயது வீரர் சாம்பியன் பட்டம் பெற்றார். அவருக்கு ஆயிரத்து 150 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ஒரு லட்சம் ரூபாய்) பரிசாக வழங்கப்பட்டது. மனித உரிமைகள் ஆணையம் மற்றும் இதர அமைப்புகள் இந்த தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் சத்தமில்லாமல் மிகுந்த பொருட்செலவுடன் நடைபெற்று வருகிறது. தற்போது ரஷ்ய நாட்டிலும் ஆங்காங்கே முளைத்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.