tamilnadu

img

இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் பணிக்கு ஜான்டி ரோட்ஸ் விண்ணப்பம்

தென் ஆப்பிரிக்காவின் முன்னால் கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்தவுடன் தலைமை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர், பந்து வீச்சு பயிற்சியாளர் ஆகிய மூன்று பணிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்தது. இதற்கான விண்ணப்பத்தை பிசிசிஐ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

கடந்த இரு நாட்களுக்கு முன், இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த பேட்ஸ்மேனும் ஆன ஜெயவர்தனே தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க இருக்கிறார் என்ற செய்தி வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது, தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

ஜான்டி ரோட்ஸ் 2017-ஆம் ஆண்டு வரை ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக இருந்துள்ளார். உலகின் தலைசிறந்த பீல்டர் என்று போற்றப்படுபவர் ஜான்டி ரோட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
 

;