tamilnadu

img

கிரிக்கெட் உலகை மிரட்டும் கங்குலி

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தா வில் நடைபெற்று வரும் பகலிரவு (பிங்க்) டெஸ்ட் போட்டியை வரலாற்று நிகழ்வாகச் சிறப்பிக்க பிசிசிஐ தலைவர் கங்குலி நவீன ஏற்பாடுகள் மூலம் ஈடன் கார்டனை பிங்க் மைதானமாக மாற்றியுள்ளார். மேலும் தொடக்கவிழாவிற்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவை சிறப்பு விருந்தினராக அழைத்து, மேற்கு வங்க முதல்வர் மம்தாவுடன் கூட்டாக பிங்க் டெஸ்ட் போட்டியைத் துவக்கி வைத் தார். 2-வது நாளில் கிரிக்கெட் துறைக்குச் சம்பந்தமில்லாத செஸ் துறை ஜாம்பவான் களான விஸ்வநாதன் ஆனந்த் -  மேக்னஸ் கார்ல்சன் (நார்வே) ஆகியோர் கூட்டாக போட்டியை மணியடித்துத் துவக்கி வைத்த னர். பிசிசிஐ தலைவராக கங்குலி பொறுப் பேற்று ஒரு மாத காலம் தான் ஆகியுள்ளது. அதற்குள் தனது அதிரடி செயலால் கிரிக்கெட் உலகை மிரட்டி வருகிறார் என்பது குறிப்பி டத்தக்கது.

;