tamilnadu

img

ஆடுகளமா இது?

இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள ஆடுகளங்களை எளிதாகக் கணித்துவிடலாம். ஆனால் நடப்பு உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து ஆடுகளத்தை பற்றி திடமாகக் கணிக்க முடியவில்லை. பொதுவாக இங்கிலாந்து ஆடுகளங்கள் 4 மணிநேரத்தில் உறங்கிவிடும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் மழை மற்றும் குளிர்ந்த காற்று பிரச்சனையால் பெரும்பாலான ஆடுகளங்கள் உறங்க மறுக்கின்றன. இதனால் சேசிங் செய்யும் அணிகளுக்கு அதிக பிரச்சனை உருவாகிறது. மழை பெய்தால் ஆடுகளத்தில் தண்ணீர் வடிய தாமதம் ஏற்படுகிறது. இதனால் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டியை தொடரக் கூட வாய்ப்புகள் ஏற்படுவதில்லை. ஆடுகளம் உறங்குவது என்றால் பந்து மந்தமாக எகிறும் என்பது குறிப்பிடத்தக்கது.