இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வீரர் தோனி சிறப்பு விடுப்பு எடுத்து ராணுவத்தில் பாராசூட் லெப்டினெண்ட் பிரிவில் (கவுரவ கர்னல்) 106 டி.ஏ படையினருடன் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார். ஜம்மு - காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப் பட்டு (ஜம்மு - காஷ்மீர், லடாக்) இந்தியா வின் செல்லப்பிள்ளைக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதனால் ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறிவிட்ட நிலையில், அங்கு நிலம் வாங்க ரியல் எஸ்டேட் துறையினர் தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் கிரிக்கெட் அகாடெமி தொடங்க தோனி திட்டமிட்டு உள்ள தாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் கிரிக்கெட் அகாடெமி தொடங்க மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்தில் உரிய அனுமதி பெற வேண்டும் என்பதால் அரசின் முடிவுக்குக் காத்துக்கொண்டிருப்பதாக தோனி தரப்பிலிருந்து செய்திகள் கசிந்துள்ளன.