tamilnadu

img

மகிழ்வு ஓட்டம்

உடுமலை, நவ. 17- உடற்பயிற்சி மற்றும் விளையாட்டின் அவ சியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மகிழ்வு ஓட்டம் சனியன்று நடைபெற்றது.  உடுமலை, அமராவதி நகரில் உள்ள சைனிக் பள்ளி வளாகத்தில் காலை 6.15 மணிக்கு மகிழ்வு ஓட்டம் தொடங்கியது. பள்ளியின் நிர்வாக அலுவ லர் மற்றும் பொறுப்பு முதல்வர் லெப்டினென்ட் கர்னல் அமித் குர்குரே இதனை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஓட்டம் 5 கி.மீ தூரம் வரை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பேசிய குர்குரே ஒவ்வொரு மாணவனும் உடல் ஆரோக்கியத்தோடு, மன நலமும் பெற்று நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.