tamilnadu

img

டி-10 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் வீரர்களுக்கு அனுமதி இல்லை

கிரிக்கெட் போட்டியின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் வகையில் இந்தியாவைச் சேர்ந்த விளையாட்டு நிறுவனம் (sports entertainment) 10 ஓவர்கள் கொண்ட டி-10 கிரிக்கெட் லீக் தொடரை ஐக்கிய அரபு அமிரகத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கியது. மிக குறுகிய கால போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் தனி மவுசு பெற்று வளர்ந்து வருகிறது.   இந்த தொடரின் 3-வது சீசன் நவம்பர் மாதம் 15-ஆம் தேதி அபுதாபியில் தொடங்குகிறது. இந்த தொடரில் பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் நட்சத்திரங்கள் அதிகளவில் பங்கேற்பது வழக்கம். நடப்பு சீசனிலும் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியிருந்தது. போட்டி தொடங்க இன்னும் 20 நாட்கள் உள்ள நிலையில் தடையில்லா சான்றிதழை ரத்து செய்வதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிரடி உத்தரவிட்டு வீரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  வீரர்களின் உடற்தகுதி, வேலைப்பளு மற்றும் உள்ளூர் கிரிக்கெட் தொடர் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.