tamilnadu

img

கிரிக்கெட் சூதாட்டம் பாக்., கிரிக்கெட் வீரருக்கு தொடர்பு

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரைப் போல பாகிஸ்தான் நாட்டில் பிஎஸ்எல்  (பாகிஸ்தான் சூப்பர் லீக்) என்ற பெயரில் ஆண்டுதோறும் டி-20 தொடர் நடை பெற்று வருகிறது.  இந்த பிஎஸ்எல் தொடரில் சூதாட்டம்  நடைபெறுவது சகஜமான நிகழ்வாக மாறிவிட்டது. ஐசிசி கண்டுபிடித்தால் தான் பிஎஸ்எல் தொடரில் நடைபெறும் சூதாட்ட நிகழ்வு கிரிக்கெட் வெளி உலகிற்கு தெரிய வரும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்டுபிடித்தால் பெரும்பாலும் சூதாட்டத்தை கண்டுக் கொள்ளாது என்பதால், பிஎஸ்எல் தொட ரில் சூதாட்டம் மூலம் சம்பாதிக்கவே உள்நாட்டு வீரர்கள் அளவுக்கு அதிகமாகக் களமிறங்குகின்றனர்.         இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் நசீர் ஜாம்ஷெட் 2008  முதல் 2013-ஆம் ஆண்டு வரை பாகிஸ் தான் தேசிய அணிக்காக விளையாடி யுள்ளார். இவர் பிஎஸ்எல் தொடரில் (2017-ஆம் ஆண்டு) சூதாட்டத்தில் ஈடு பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இவருடன் பாகிஸ்தானின் ஷர்ஜீல் கான், காலித் லதீப்பும் சூதாட்ட புகாரில் சிக்கினர்.  நசீர் ஜாம்ஷெட் தான் குற்றம் செய்யவில்லை என  தொடர்ந்து  மறுத்து வந்த நிலையில்,  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசார ணை நடத்தி நசீர் ஜாம்ஷெட்டுக்கு அனைத்துவிதமாக கிரிக்கெட் போட்டி களிலும் பங்கேற்க 10 ஆண்டுகள் தடை விதித்தது. மற்ற வீரர்களுக்கு 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.  போதாக்குறையாக இங்கிலாந்தின் மான்செஸ்டர் நீதிமன்றம் வேறு இந்த வழக்கைத் தனியாக விசாரித்து வந்த நிலையில், நசீர் ஜாம்ஷெட் பிஎஸ்எல் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டது உண்மையே எனத் தீர்ப்பு வழங்கியது. ஜாம்ஷெட் உள்ளிட்ட மூவருக்கும் வரும் பிப்ரவரி மாதத்தில் தண்டனை அளிக்கப்பட உள்ளது.